Sunday, 25 September 2011

கதை சொல்லிகள்


சில உறவுகள் நம்மை விடாது , நாம தோத்துபோறப்போ சிரிக்கிற சிலரை மறக்குறது ரொம்ப கஷ்டம் !  ஒரு நாள் என்னுடைய  குறும்படம் ஒன்னு இணைய தளத்துல விட்டேன் !நிறைய பேர் ரசிச்சிருந்தாங்க,ஒருதற்கு மட்டும் ஏனோ புடிக்ல , ஏன் புடிக்கலன்னு அவர்கிட்ட கேட்க துடிச்சேன் ,ஆனா அந்த படத்த ரசிச்ச நிறையபேர்ல ஒருத்தர் கூட நம்ம கண்ணுக்கு தெரியாம போச்சே !,இவர் மட்டும் ஏன் இப்டி என்ன புலம்ப  விட்டாருன்னு, என்ன நானே  கேட்க்க ஆரம்பிச்சேன் ! .... ரசிச்ச அவ்ளோ பேர்ல அவர மட்டும் கண்ணுல நிறுத்திட்டு மத்த எல்லாரையும் நான் மறந்துட்டேன் !உண்மையான கருத்துக்கள பகிருற சிலரை நாம எல்லாரும் இப்படி  தான் ஒவ்வொரு சூழ்நிலையிலும் வேற வேற மாறி உதாசின படுத்திக்கிட்டு இருக்கோம்! என் வாழ்கையில நான் சந்திச்ச உறவுகள் எனக்கு நிறைய சொல்லிகொடுத்துருக்காங்க , நான் சின்ன வயசுல இருந்தப்போ, என் பாட்டில இருந்து என்ன கடந்து சென்ற யாரோ ஒருவர் வரைக்கும் ,எனக்கு நேரடியாகவோ இல்ல மறைமுகமாகவோ இல்ல வாழ்ந்தோ சொல்லிகொடுத்துருக்காங்க! எல்லாத்தையும் நான் உணர்ந்துருக்கேன் ! அந்த அந்த வயசுக்கு தகுந்தமாதிரி  என்னோட மூளை  வளர்ச்சிக்கு தகுந்தமாதிரி  ஒவ்வொருத்தரும் சில கதைகள சொல்லிகிட்டே இருக்காங்க !ஒரு ஊர் ல ஒரு ராஜானு ஆரம்பிச்ச அம்மா முதல் . கடைசில விட்டு போய்டடா மச்சான்னுஅழுகுர நண்பன் வரைக்கும் ஏதோ ஒருவகைல என்ன எச்சரிச்சுகிட்டே இருக்காங்க ! இத பண்ணாதடானு   சொன்னா, நான் அத கேக்கமாட்டேன்,இது அதுனால ஆகும்டானு ,  சொன்னா யோசிப்பேன் ,எனக்கு இப்டிதான்டா ஆச்சுனு  சொன்னா நிறுத்துவேன்! அது உண்மையா இருந்தா அதுக்கு மேல செய்யமாட்டேன் , எல்லாத்தையும் கதைகளா கேட்டு வளந்தவங்க தானே நாம எல்லாரும் ! நானும் உங்களில் ஒருவன் தானே ! அப்படி என்கிட்ட கதை சொல்லிய கதை சொல்லிகள் எல்லாரும் இப்போ என்கிட்ட தொடர்பில  இருக்காங்களான்னு   கேட்டா  நான் விழிப்பேன்!,காரணம், நிறைய பேர் தொடர்பில்  இல்ல ! நான் அவங்கள இழந்தேனா !இல்ல, என்ன அவங்க இழந்தார்களா ! இல்ல அவங்க என் வாழ்கைல வந்ததே கதை சொல்லிட்டு போகத்தானா? வியப்புடனும் அடுத்து வரும் கதை சொல்லி யார் என்ற ஆர்வத்துடனும் என் பயணம் !    

No comments:

Post a Comment